குரு மகாத்மீயம் – இது குருவின் (பரஞ்சோதியின்) காலம்

(இடைக்காடர் சித்தர் அவர்கள் அருளியது)

இது குருவின் (பரஞ்சோதியின்) காலம்

காலத்தின் கணிவும், காலத்தின் துணிவும்,

காலத்தின் ஆக்கிணையும், காலத்தின் விதியும்,

காலனின் காலன், காலனின் காலன்

காலனின் பொற்காலம் இதுவம்மா !

ஏங்கி தவித்த மானிட உயிர்கள்

முக்தி பெறுகின்ற காலம் !

எங்களைப் போல் சூக்குமத்தில் திரிகின்ற “சித்தர்களுக்கு”

எங்களின் உணர்வை வெளிப்படுத்துகின்ற காலம் !

எங்களின் அகத்திலே விளங்குகின்ற அந்த

ஜோதியை வெளிப்படுத்துகின்ற காலம் !

சித்தனின் காலம் குருவின் காலம் !!

அந்த பரஞ்சோதியின் காலம் !!

பரஞ்சோதியின் காலம்!!