குரு மகாத்மீயம் – பூமியில் கொரோனாவின் தாக்கம், அதனை வேரோடு அகற்ற மூன்று வழிகள்

சத்குருவே சரணம்! சந்தோசம்!

பூமியிலே இன்று இந்த கிருமியினால் ஏற்படுத்தப்பட்ட மரண ஓலங்கள் அதனுடைய பரவலான தாக்கங்களை மனிதர்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை.

விண்ணிலிருந்து தோன்றிய இந்த விஷக் கிருமியானது, தான் கொண்ட சங்கல்பத்தின் மூலம் அவ்வளவு எளிதாக இந்த பூமியை விட்டு செல்லாது.

இந்தக் கிருமியை பூமியிலிருந்து தூய்மை செய்ய மூன்று விதமான நிலைகள் சாத்தியப்படுகிறது.

முதல் நிலை

எந்த விண்ணிலிருந்து இந்த கிருமி தோன்றியதோ அதே சக்தியோடு அதை சரி செய்கின்ற மற்றொன்று அதே விண்ணிலிருந்து இந்த கிருமியை எதிர்த்து தோன்ற வேண்டும்

இரண்டாம் நிலை

மனிதர்கள் கொள்ளுகின்ற ஔஷத நிலையானது, அதை பூரணமாக உடலுக்குள் பரவிய பிறகு, சம்ஹாரம் செய்கின்ற ஒரு நிலைகள் தோன்ற வேண்டும்.

இந்த இரண்டாவது நிலைக்கு மாற்று உபாயம் தோற்றுவிக்கின்ற மருத்துவர்கள், இந்த பூமியினுடைய மரண ஓலங்களில் இருந்து அவர்களுடைய மனதை அமைதி நிலைக்கு சென்றால் அன்றி இதனுடைய தீர்வை கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

மூன்றாம் நிலை

இந்தக் கிருமி எங்கே எந்த பூமியிலிருந்து உதித்ததோ, அதாவது சீன தேசம், அங்கேயே மீண்டும் சரி செய்யப்பட வேண்டும்.

உடலையும் சிறிதாகக் கொண்டு, மனதையும் சிறிதாகக் கொண்டவர்கள், அவர்கள் கொண்ட மாபாதக எண்ணத்தால் ஆரம்ப நிலைகளில் வெற்றி கொள்வது போல் தோன்றினாலும் பின்னர் கானல் நீராகவே தோன்றும்.

இந்த நாட்டைச் சேர்ந்த கொடுங்கோல் அரசன், தன்னுடைய குடிமக்களைத் துன்புறுத்தி அதன்மூலம் அரசாட்சியை விரிவுபடுத்திக் கொள்ளுகின்ற இந்நிலைகளானது, என்று அந்த அரசனுக்கு மாபாதக எண்ணங்கள் தோன்றியதோ, அந்த வினையின் விளைவாக அந்த விண்ஒளி “ஒழி” என்ற பிரம்மஹத்தி தோஷத்தை உருவாக்கிவிட்டது.

இந்த பூமியிலே பிராப்தம் முற்றுப்பெறாமல் உயிர் பிரிகின்ற நிலையானது, ஒரு குழந்தையிடம் தின்பண்டங்களை பிடிங்கினால் அந்த குழந்தை எவ்வளவு பரிதவிக்குமோ, அதே போன்று போரில் நேர் எதிரே போர் புரியும் ஒரு வீரன், அவனை பின்னிருந்து இருகைகளையும் கொய்து விட்டால் அந்த உயிர் எவ்வளவு பரிதவிக்குமோ, அதைவிட பன்மடங்காக பிராப்தம் கழியாத உயிர் கொள்ளுகின்ற நிலையாகும்.

கொரோனாவின் பாதிப்புகளை உணர சில வழிகள்
இந்நிலைகளை உணர முக்கண்ணனிடம் முச்சந்தியிலே இந்த பிரதமையை பெற்றவர்கள் மூன்று நாட்கள் இருட்டு அறையில், திரவத்தை மட்டும் உட்கொண்டு நன்கு உற்று நோக்கி பார்த்தீர்களானால் இந்த உலகத்தில் உள்ள அலைகளையும், இதுவரை உங்கள் வாழ்வில் ஏற்பட்ட இன்ப, துன்பங்களை, சரி, தவறுகளை நீங்கள் பிறந்த காரணங்களை, நீங்களே அறியலாம்.

உங்களுடைய அறிவிலே இந்த ஆழ் அமைதியிலே ஒரு மிகச்சிறந்த தெலிற்சி ஏற்படும்.

அத்தெளிற்சியை கொண்டு நீங்கள் இந்த உத்தம நிலையை உணர முடியும்.

இதற்கெல்லாம் பெரும் தீர்வாக நிகுல வம்சத்தை சேர்ந்தவர்கள் தினம்தோறும் ஒற்றைக்காலில், மூன்று நிமிடம் நின்று இந்த அமிர்த ஜோதியிடம் முச்சந்தியில் நின்று விண்ணப்பம் செய்து கோரிக்கை வைக்க, முக்கண்ணன் செவிமடுக்க, இந்த பூமி முழுவதும் இதை சரி செய்கின்ற அலைகளானது ஏற்படும்.

பிரபஞ்சத்தின் மையம் என்று சொல்லப்படுகின்ற இந்த லெமூரியா கண்டத்தை வட குறுமுனியும்(அகத்தியர்), தென் குறுமுனியும்,
ஏற்படுத்தி இருக்கின்ற சமன்பாடு, மற்ற பல பீஷ் மங்கள் பொருந்திய சத்திய பூர்ஷர்களால் ஏற்படுத்தப்பட்ட அரணை, இந்த பிரஞ்சம் நினைத்தாலும் தகர்கமுடியது.

ஆதலால் வீரத்துடன் இக்காலத்தில் நீங்கள் இந்த பயிற்சிகளை செய்து வர நீங்களும் உத்தமம் மேவி நிற்பீர்கள்.